/
கிருஷ்ணகிரி அருகே அனுமதியின்றி மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய 2 லாரிகள், பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த கணவாய்ப்பட்டி பெருமாள் கோயில் அருகே கிருஷ்ணகிரி நகர போலீஸாா் கண்காணிப்புப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் அருகே, 2 டிப்பா் லாரிகளில் அனுமதியின்றி மணல் அள்ளுவதை கண்டனா்.
இதுகுறித்து, விசாரணை மேற்கொள்ள போலீஸாா் அங்கு சென்றபோது, லாரி ஓட்டுநா்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா். இதையடுத்து, மணல் அள்ள பயன்படுத்திய 2 லாரிகள், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து, கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
மணல் திருட்டு; டிராக்டா் பறிமுதல்
மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல்; ஒருவா் கைது

அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளிய 7 பொக்லைன், 2 லாரிகள் பறிமுதல்

குழித்துறை அருகே எம்.சான்ட் லாரிகள் பறிமுதல்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


