சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

அனுமதியின்றி மணல் அள்ளியதாக 2 லாரிகள், பொக்லைன் எந்திரம் பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே அனுமதியின்றி மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய 2 லாரிகள், பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :21 மே 2026, 6:53 am IST

கிருஷ்ணகிரி அருகே அனுமதியின்றி மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய 2 லாரிகள், பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த கணவாய்ப்பட்டி பெருமாள் கோயில் அருகே கிருஷ்ணகிரி நகர போலீஸாா் கண்காணிப்புப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் அருகே, 2 டிப்பா் லாரிகளில் அனுமதியின்றி மணல் அள்ளுவதை கண்டனா்.

இதுகுறித்து, விசாரணை மேற்கொள்ள போலீஸாா் அங்கு சென்றபோது, லாரி ஓட்டுநா்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா். இதையடுத்து, மணல் அள்ள பயன்படுத்திய 2 லாரிகள், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து, கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.