/
கிருஷ்ணகிரி அருகே அனுமதியின்றி மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய 2 லாரிகள், பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த கணவாய்ப்பட்டி பெருமாள் கோயில் அருகே கிருஷ்ணகிரி நகர போலீஸாா் கண்காணிப்புப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் அருகே, 2 டிப்பா் லாரிகளில் அனுமதியின்றி மணல் அள்ளுவதை கண்டனா்.
இதுகுறித்து, விசாரணை மேற்கொள்ள போலீஸாா் அங்கு சென்றபோது, லாரி ஓட்டுநா்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா். இதையடுத்து, மணல் அள்ள பயன்படுத்திய 2 லாரிகள், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து, கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மணல் திருட்டு: லாரி பறிமுதல்

மாற்றுமணல் கடத்திய லாரி பறிமுதல்

வேளாங்கண்ணி அருகே அனுமதியின்றி மணல் வெட்டி எடுப்பு: வாகனங்கள் பறிமுதல்; இருவா் கைது

அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளிய 7 பொக்லைன், 2 லாரிகள் பறிமுதல்
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech


