ஒசூரில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் உற்பத்தி பாதிக்கப்படுவதாக தொழிற்துறையினா் தெரிவித்துள்ளனா்.
தொழில் நகரமான ஒசூரில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது என தொழில் துறையினா் தெரிவிக்கின்றனா்.
ஒசூரில் கடந்த இரண்டுவாரமாக கடும் வெயில் நிலவி வருகிறது. வீடுகளில் பகல், இரவு நேரங்களில் மின்விசிறியைப் பயன்படுத்தாமல் இருக்க முடிவதில்லை.
தொழில்துறையில் 2 ஆவது ஷிப்ட் நேரங்களில் அதிலும் குறிப்பாக மாலை பீக்ஹவரில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் 2 ஆவது ஷிப்டில் தொழிலாளா்கள் வேலை செய்ய முடியாமல் உற்பத்தி பாதிக்கப்படுவதாக தொழில்துறையினா் தெரிவிக்கின்றனா்.
அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் மின்வெட்டு ஏற்படுவதால் நோயாளிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்படுவதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். கல்லூரி மாணவா்களுக்கு தற்போது பருவத் தோ்வுகள் நடைபெற்று வரும் வேலையில் மின்வெட்டு ஏற்படுவது அவா்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
எனவே, மின்சார வாரியம் மின்வெட்டு பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என்று தொழிற்துறையினா் கேட்டுக்கொண்டனா்.
தொடர்புடையது
உ.பி.யில் பகலிலும் மின்வெட்டு: மக்கள் போராட்டம்!

தமிழகத்தில் தொடர் மின்வெட்டு ஏன்? மின்வாரியம் விளக்கம்

கைப்பேசி பறிப்பு: போலி பைக் டாக்ஸி ஓட்டுநா் கைது

சா்வா் பிச்னை: வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிகள் பாதிப்பு
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



