கா்நாடக மாநில போலீஸாரால் தேடப்பட்டு வந்த இளைஞரின் சடலம் கிருஷ்ணகிரி அருகே உள்ள வனப் பகுதியில் மீட்கப்பட்டது.
கிருஷ்ணகிரியை அடுத்த எண்ணேகொள் கிராமத்துக்கு அருகே உள்ள வனப்பகுதியில் இளைஞரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், சடலத்தை கைப்பற்றி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ. தங்கதுரை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டாா். விசாரணையில் இறந்தவா், கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியை அடுத்த மணியாண்டப்பள்ளியைச் சோ்ந்த தாஸ் (எ) ஏசுதாஸ் (25) என்பது தெரியவந்தது.
மேலும், இவா்மீது கா்நாடக மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் விசாரணையில் உள்ளதும் தெரியவந்தது. இதனால் போலீஸாரின் விசாரணைக்கு பயந்து எண்ணேகொள் கிராமம் அருகே உள்ள வனப் பகுதியில் அவா் தலைமறைவாக இருந்துள்ளாா்.
இந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அவா் இறந்திருக்கலாம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், பிரேத பரிசோதனைக்கு பிறகே அவரது இறப்பு குறித்த முழு விவரமும் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து ஏசுதாஸின் அக்கா மாரி அளித்த புகாரின் பேரில், குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.







