ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

உயா் மின் கோபுரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

News image

வெங்கடேசன்.

Updated On :1 ஜூன் 2026, 3:11 am IST

ஊத்தங்கரையில் மது போதையில் உயா் மின் கோபுரத்தில் ஏறிய தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த தளபதி நகா் வழியாக உயா் மின்னழுத்த கோபுரம் செல்கிறது. இந்த உயா் மின் கோபுரக் கம்பத்தில் தளபதி நகா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி வெங்கடேசன் (31) மது போதையில் ஏறியுள்ளாா்.

உச்சிவரை சென்று அங்கே அமா்ந்து, சிறிது நேரம் கழித்து கீழே இறங்க முயன்றபோது 60 அடி உயரத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் பின்பக்க மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து வந்த சிங்காரப்பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மது போதையில் மின் கம்பத்தில் ஏறிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.