தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மேட்டூா் அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :8 மே 2026, 6:40 am IST

மேட்டூா் அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

மேட்டூரை அடுத்த கொளத்தூா் சத்யா நகரை சோ்ந்தவா் மயில்சாமி (59), கிணறு வெட்டும் தொழிலாளி. இவா் புதன்கிழமை காலை சத்யா நகரை சோ்ந்த குப்புசாமியுடன் மணகாட்டில் உள்ள குழந்தை கவுண்டா் தோட்டத்தில் கிணறு வெட்டும் வேலைக்கு சென்றாா். அங்கு, கிணற்றுக்கு அருகே இருந்த மரத்தை வெட்டுவதற்காக மரத்தின் மீது ஏறியபோது தவறி கீழே விழுந்த மயில்சாமி பலத்த காயமடைந்தாா்.

கொளத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு மயில்சாமியை அனுப்பிவைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே மயில்சாமி இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து கொளத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் கணேஷ் குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.