கீழ் வெண்மணி நினைவு தினம் அனுசரிப்பு
எலச்சிபாளையம் ஒன்றியம், சின்ன எலச்சிபாளையத்தில் கீழ்வெண்மணி நிகழ்வின் 50-ஆம் ஆண்டு நினைவுதினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அண்மையில் அனுசரிக்கப்பட்டது.


எலச்சிபாளையம் ஒன்றியம், சின்ன எலச்சிபாளையத்தில் கீழ்வெண்மணி நிகழ்வின் 50-ஆம் ஆண்டு நினைவுதினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அண்மையில் அனுசரிக்கப்பட்டது.
நாகை மாவட்டம், கீழ்வெண்மணியில் அரைபடி நெல் கூலி உயர்வு கேட்டு போராடிய விவசாய கூலித் தொழிலாளர்களை சாணி பாலும் சவுக்கடியும் கொடுத்து துன்புறுத்தி 1968-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி அன்று ஒரே குடிசையில் 44 நபர்களை அடைத்து தீ வைத்து எரித்துக் கொன்றனர்.
இச்சம்பவத்தின் நினைவு தின நிகழ்ச்சியில் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். மூத்த தோழர் சுந்தரம் 50-ஆம் ஆண்டு நினைவுதினக் கொடியை ஏற்றி வைத்து தியாகிகள் குறித்துப் பேசி அஞ்சலி செலுத்தினார்.
நினைவுதின கொடியேற்று நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் சுரேஷ், ஒன்றியக் குழு உறுப்பினர் ரமேஷ், கிளைச் செயலாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...