சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கீழ் வெண்மணி நினைவு தினம் அனுசரிப்பு

எலச்சிபாளையம் ஒன்றியம், சின்ன எலச்சிபாளையத்தில் கீழ்வெண்மணி நிகழ்வின் 50-ஆம் ஆண்டு நினைவுதினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அண்மையில் அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:02 am

DIN

எலச்சிபாளையம் ஒன்றியம், சின்ன எலச்சிபாளையத்தில் கீழ்வெண்மணி நிகழ்வின் 50-ஆம் ஆண்டு நினைவுதினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அண்மையில் அனுசரிக்கப்பட்டது.
நாகை மாவட்டம், கீழ்வெண்மணியில் அரைபடி நெல் கூலி உயர்வு கேட்டு போராடிய விவசாய கூலித் தொழிலாளர்களை சாணி பாலும் சவுக்கடியும் கொடுத்து துன்புறுத்தி 1968-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி அன்று ஒரே குடிசையில் 44 நபர்களை அடைத்து தீ வைத்து எரித்துக் கொன்றனர்.
இச்சம்பவத்தின் நினைவு தின நிகழ்ச்சியில் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். மூத்த தோழர் சுந்தரம் 50-ஆம் ஆண்டு நினைவுதினக் கொடியை ஏற்றி வைத்து தியாகிகள் குறித்துப் பேசி அஞ்சலி செலுத்தினார்.
நினைவுதின கொடியேற்று நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் சுரேஷ், ஒன்றியக் குழு உறுப்பினர் ரமேஷ், கிளைச் செயலாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.