பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே புதன்கிழமை அடுத்தடுத்து நான்கு சொகுசு கார்கள் மோதிய விபத்தில், கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பரமத்தி வேலூரில் இருந்து கரூர் நோக்கி சென்ற தனியார் தங்கும் விடுதியைச் சேர்ந்த கிரி என்பவரது கார் திடீரென பழுதாகி கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலம் அருகே நின்றது. இதைத் தொடர்ந்து, பெங்களூரில் இருந்து கரூர் மற்றும் மதுரை நோக்கி பின்னால் வந்த இரண்டு கார்களும், சேலத்தில் இருந்து கரூர் நோக்கி சென்ற மற்றொரு காரும் மோதிக்கொண்டன. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் வந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து காரணமாக கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

5 மாவட்டங்களில் நாளை (ஜூன் 15) மழைக்கு வாய்ப்பு!

பெல் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

வீண்போகாத ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை..! ஆட்ட நாயகன் விருது வென்ற புலம்பெயர்ந்த வீரர்!

தொடர் வெற்றிகள்... நூறு சாமியிலும் அசத்துவாரா ஸ்வாசிகா?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


