பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

காவிரி பாலம் அருகே விபத்து: போக்குவரத்து பாதிப்பு

பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே புதன்கிழமை அடுத்தடுத்து நான்கு சொகுசு கார்கள் மோதிய விபத்தில், கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On :5 ஏப்ரல் 2018, 7:15 am IST

பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே புதன்கிழமை அடுத்தடுத்து நான்கு சொகுசு கார்கள் மோதிய விபத்தில், கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பரமத்தி வேலூரில் இருந்து கரூர் நோக்கி சென்ற தனியார் தங்கும் விடுதியைச் சேர்ந்த கிரி என்பவரது கார் திடீரென பழுதாகி கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலம் அருகே நின்றது. இதைத் தொடர்ந்து, பெங்களூரில் இருந்து கரூர் மற்றும் மதுரை நோக்கி பின்னால் வந்த இரண்டு கார்களும், சேலத்தில் இருந்து கரூர் நோக்கி சென்ற மற்றொரு காரும் மோதிக்கொண்டன. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் வந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து காரணமாக கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.