முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

பயிர் காப்பீட்டுத் திட்ட விழிப்புணர்வு முகாம்

பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் வெள்ளக்கல்பட்டி கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் வெள்ளக்கல்பட்டி கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதில் நாமகிரிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் பெ.மோகன் தலைமை வகித்தார். இம்முகாமில் வட்டார துணை வேளாண் அலுவலர் பெ.பசுபதி பங்கேற்று பிரீமியத் தொகை ஒரு ஏக்கர் மக்காச்சோளத்துக்கு ரூ.464, சோளத்துக்கு ரூ.266, ராகிக்கு ரூ.242, உளுந்து, பாசிப்பயறு, துவரை ஆகியவற்றுக்கு ரூ.286, நிலக்கடலைக்கு ரூ.467, பருத்திக்கு ரூ.1,518 என குறிப்பிட்டார். பயிர் காப்பீடு செய்வதற்கான இறுதி நாள் ஆக.16 என்பதையும் தெரிவிக்கப்பட்டது.
மேலும்,  பயிர் காப்பீடு செய்வதற்கு தேவையான ஆவணங்களான முன்மொழிப் படிவம், விண்ணப்பம், பயிர் சாகுபடி அடங்கல் அறிக்கை, ஆதார் அட்டை நகல், சிட்டா நகல், வங்கிக் கணக்கு புத்தகம் பற்றியும், பயிர் காப்பீடு கட்டணம் செலுத்தும் இடங்களான தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், அரசு பொது சேவை மையங்கள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.
இம்முகாமில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ர.சந்திரசேகரன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ம.விக்னேஸ்வரி, வெ.விக்னேஷ், உதவி வேளாண் அலுவலர் பெ.ராமமூர்த்தி, பயிர் அறுவடை பரிசோதனையாளர் செ.பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.