பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்பு: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வரவேற்பு

அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வரவேற்றுள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வரவேற்றுள்ளது.
இதுகுறித்து கூட்டணி மாநிலத் தலைவர் செ.முத்துசாமி வெளியிட்ட அறிக்கை: அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகள் வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும், வரும் பொங்கல் பண்டிகை முதல் கல்விக்கு என தனி தொலைக்காட்சி சேனல் தொடங்கப்பட்டு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புகளை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வரவேற்று பாராட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக கல்வி நிகழ்ச்சிகளுக்கு என தனி சேனல் தொடங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு, கூட்டணி சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தோம்.
அதேபோல், அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க வேண்டும் என தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அறிவிப்பு வெளியிட்ட தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை கூட்டணி பாராட்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.