வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் குண்டம் இறங்கிய பக்தர்கள்

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன்  கோயில் மகா குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. ப

News image
Updated On :1 மார்ச் 2018, 1:31 am

DIN

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன்  கோயில் மகா குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்.
நாமக்கல் மாவட்டம்,  திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா  கடந்த 16-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து குண்டம் இறங்கி வேண்டுதல் நிறைவேற்றினர். 26-ஆம் தேதி பூச்சொரிதல்  நடத்தப்பட்டது.  27 -ஆம் தேதி இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் குண்டத்துக்கு பூஜை நடத்தப்பட்டு இரவு மங்கள வாத்தியங்கள் முழங்க புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து மகா குண்டம் திருவிழா நடைபெற்றது. மாலை அணிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முதல் காலை 10 மணிவரை  குண்டம் இறங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.