குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் குடிநீர் குழாயில் சாய மற்றும் சாக்கடைக் கழிவுகள் கலந்து துர்நாற்றத்துடன் புதன்கிழமை குடிநீர் விநியோகிக்கப்பட்டதால், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியும், பரபரப்பும் காணப்பட்டது.
குமாரபாளையம் நகராட்சி, 20, 22 மற்றும் 25-வது வார்டு பகுதிகளான அப்பன்காடு, பாலக்கரை, தம்மண்ணன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு நாள்களாக குடிநீர் குழாயில் சாயக் கழிவுநீர் கலந்து வந்துள்ளது. மேலும், பெரும்பாலும் நெசவுத் தொழிலாளர்கள் நிறைந்த இப் பகுதியில் தண்ணீரின் இயல்பான நிறத்தில் மாறுதல் காணப்பட்டதோடு, தூர்நாற்றமும் வீசியுள்ளது. இதனால், பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பில் சாக்கடை, சாயக்கழிவுகள் கலந்திருக்கலாம் எனக் கருதிய பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, குடிநீர் குழாயில் சாயக் கழிவுகள் கலந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, குழாயில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டதோடு, கழிவுகள் கலந்து வரும் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டாம் எனவும், பின்னர் வரும் நீரைப் பிடித்து பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், அபெக்ஸ் காலனி பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இந் நிலையில் அப் பகுதியில் உள்ள சாயப் பட்டறையிலிருந்து இரவில் ரகசியமாக வெளியேற்றப்பட்ட சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் குடிநீர் குழாயில் கலந்து சென்றுள்ளது. உடைப்பு சரி செய்யப்பட்ட பின்னர் தண்ணீர் விநியோகிக்கும்போது, கழிவுகளுடன் கலந்து சென்றுள்ளது என்றனர்.
மேலும், கழிவுகளை வெளியேற்றிய பட்டறைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதோடு, குடிநீர் இணைப்பைத் துண்டித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், குடிநீர் குழாயில் சாயப்பட்டறைக் கழிவுநீர் கலந்து வரும், அதனைப் பிடித்து பயன்படுத்த வேண்டாம் எனவும் முன்னெச்சரிக்கையாக நகராட்சி நிர்வாகம் எவ்வித முறையான அறிவிப்பும் செய்யவில்லை.
இந்நிலையில், குழாயில் குடிநீருடன் கலந்த தண்ணீரைப் பயன்படுத்தும்போது பாதிப்புகள் ஏற்படும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம்: லாலுவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளிடம் 2-ம் கட்டமாக ஏப்.17 முதல் 19 வரை தபால் வாக்குப்பதிவு

திமுக எம்எல்ஏ, நெல்லை மேயா் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி மனு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

