குறைதீர் கூட்டம்: மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி அளிப்பு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 28 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.36,500 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 28 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.36,500 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 316 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய அலுவலர்களிடம் வழங்கி, துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மேலும், 28 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.36,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார். கூட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் எம்.துரை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...