தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மாவட்ட மைய நூலகத்தில் கோடை கால பயிற்சி வகுப்பு

நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் மாணவ, மாணவியருக்கான கோடை கால பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.

News image
Updated On :14 மே 2018, 9:14 pm

DIN

நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் மாணவ, மாணவியருக்கான கோடை கால பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.
நாமக்கல் கோட்டை சாலையில் செயல்படும் மாவட்ட மைய நூலகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு மாணவ , மாணவியருக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி, கடந்த 6 ஆம் தேதி விரைவாக வாசிப்பதற்கான பயிற்சியும், 13 ஆம் தேதி கையெழுத்துப் பயிற்சியும், 14 ஆம் செஸ் பயிற்சியும் அளிக்கப்பட்டது. வரும் 19 ஆம் தேதி நினைவாற்றல் அதிகரிப்பற்கான பயிற்சி, 20 ஆம் தேதி யோகா பயிற்சி, 26 ஆம் தேதி ஓவியப் பயிற்சி, 27ஆம் தேதி குழந்தைகளுக்கு கதை சொல்லுதல் நிகழ்வும் நடக்கிறது.
இந்த பயிற்சி வகுப்புகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். மேலும், பயிற்சி முடிக்கும் மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. ஏற்பாடுகளை மாவட்ட நூலக அலுவலர் பாலகிருஷ்ணன், வாசகர் வட்டத் தலைவர் ஜோதிலிங்கம், இரண்டாம் நிலை நூலகர் வேல்முருகன் ஆகியோர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.