மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 31 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 31 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

Updated On :21 மே 2018, 10:45 pm

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 31 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 300 மனுக்கள் வரப்பெற்றன. அதனை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் வழங்கி, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார். கூட்டத்தில், 31 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.97,000 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் எம்.துரை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கே.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.