மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

தீபாவளிப் பண்டிகை: மக்கள் கூட்டத்தால் திணறியநாமக்கல் நகரம்

தீபாவளி பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் நாமக்கல் நகரில் ஜவுளி, பட்டாசு போன்ற

Updated On :5 நவம்பர் 2018, 8:57 am IST

தீபாவளி பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் நாமக்கல் நகரில் ஜவுளி, பட்டாசு போன்ற பொருட்களின் இறுதிகட்ட வியாபாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை தீவிரமாக நடைபெற்றது. இதனால் மக்கள் கூட்டத்தால் நாமக்கல் நகரம் போக்குவரத்து நெரிசலில் திணறியது. 
நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நகைகள், ஜவுளி மற்றும் பட்டாசு வாங்க நாமக்கல்லுக்கு வந்ததால் கடைவீதி, சேலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.  இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதை கட்டுப்படுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். மேலும் குற்றச் செயல்களை தடுக்க போலீஸார் தற்காலிக கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 
மேலும், நாமக்கல்லில் தங்கி பணியாற்றி வந்த ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்குப் புறப்பட்டதால் பேருந்துகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.