மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

விதை பண்ணைகளில்  இணை இயக்குநர் ஆய்வு

கோவை விதைச் சான்றிதழ் இணை இயக்குநர் செல்வராஜ், நாமக்கல் மாவட்டத்தில் விதைச் சான்றிதழ்

Updated On :22 அக்டோபர் 2018, 2:35 am

கோவை விதைச் சான்றிதழ் இணை இயக்குநர் செல்வராஜ், நாமக்கல் மாவட்டத்தில் விதைச் சான்றிதழ் துறையின் பணிகளை அண்மையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பரமத்திவேலூர் அருகே நடந்தை மற்றும் ராமதேவம் கிராமங்களில் அமைக்கப்பட்டு உள்ள நிலக்கடலை விதைப் பண்ணை மற்றும் எருமப்பட்டி வட்டாரம் காளிசெட்டிப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வீரிய ஒட்டு ஆமணக்கு விதைப் பண்ணைகளை அவர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் இயங்கும் விதை பரிசோதனை ஆய்வகத்தின் விதை முளைப்புத்திறன் பரிசோதனைகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
 பின்னர் நாமக்கல் விதைச் சான்றிதழ் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், விதைச் சான்றிதழ் பணிகளான விதைப்பண்ணை பரப்பு பதிவு செய்தல், சான்றளிப்பு செய்யப்பட வேண்டிய விதை அளவுகள், விதைப் பண்ணை பதிவேடு, சான்றட்டை இருப்பு பதிவேடு, விதை மாதிரிகள் அனுப்பும் பதிவேடு மற்றும் பணப் பதிவேடுகளை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.
மேலும் விதைப் பண்ணைகள் வயலாய்வு மேற்கொள்ளும்போது கவனிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர், நாமக்கல் மாவட்டத்தில் அத்தனூர் பகுதியில் செயல்படும் தனியார் விதை சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்து விதை சுத்திகரிப்புப் பணிகள், வயல்மட்ட விதைகள் இருப்பு, விதை மாதிரிகள் எடுக்கும் பணிகள் மற்றும் பராமரிக்கும் பதிவேடுகளை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது நாமக்கல் மாவட்ட விதைச் சான்றிதழ் உதவி இயக்குநர் ஜெகதீசன், விதைச் சான்றிதழ் அலுவலர்கள் ஜெயக்குமார், ராஜ்குமார், பிரேமா மற்றும் உதவி விதை அலுவலர்கள் 
உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.