பிலிக்கல்பாளையம் அருகே காவிரி ஆற்றில் மணல் திருட்டைத் தடுக்கும் வகையில், வருவாய்த் துறையினர் ஆற்றுப் பாதையில் குழிகள் தோண்டி தடை ஏற்படுத்தினர்.
பிலிக்கல்பாளையம் அருகே எம்.குன்னத்தூர் காவிரி ஆற்றில் தொடர்ந்து இரவு, பகலாக இரு சக்கர வாகனத்தின் மூலம் மணல் திருட்டு நடைபெறுவதாக வருவாய்த் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பரமத்தி வேலூர் மண்டல துணை வட்டாட்சியர் சசிக்குமார் தலைமையிலான வருவாய்த் துறையினர் அங்கு சென்று மணல் திருட்டைத் தடுக்கும் வகையில், ஜேசிபி வாகனம் மூலம் ஆற்றுப் பாதையில் குழித் தோண்டி பள்ளம் ஏற்படுத்தினர். பொதுமக்களுக்கு இடையூறின்றி இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் காவிரி ஆற்றில் மணல் திருடுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (02 மே 2026) 12 ராசிகளுக்கும்! விருச்சிக ராசிக்கு பணவரவு!

வெள்ளக்கோவிலில் ரத்த தான முகாம்

வெள்ளக்கோவிலில் திமுக சாா்பில் மே தின விழா
முத்தூரில் மதுபானம் விற்றவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

