கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

எம்.குன்னத்தூர் காவிரி ஆற்றில் மணல் திருட்டைத் தடுக்க நடவடிக்கை

பிலிக்கல்பாளையம் அருகே காவிரி ஆற்றில் மணல் திருட்டைத் தடுக்கும் வகையில், வருவாய்த் துறையினர் ஆற்றுப் பாதையில் குழிகள் தோண்டி தடை ஏற்படுத்தினர்.

Updated On :22 அக்டோபர் 2018, 2:36 am

பிலிக்கல்பாளையம் அருகே காவிரி ஆற்றில் மணல் திருட்டைத் தடுக்கும் வகையில், வருவாய்த் துறையினர் ஆற்றுப் பாதையில் குழிகள் தோண்டி தடை ஏற்படுத்தினர்.
பிலிக்கல்பாளையம் அருகே  எம்.குன்னத்தூர் காவிரி ஆற்றில் தொடர்ந்து இரவு, பகலாக இரு சக்கர வாகனத்தின் மூலம் மணல் திருட்டு நடைபெறுவதாக வருவாய்த் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பரமத்தி வேலூர் மண்டல துணை வட்டாட்சியர் சசிக்குமார் தலைமையிலான வருவாய்த் துறையினர் அங்கு சென்று மணல் திருட்டைத் தடுக்கும் வகையில், ஜேசிபி வாகனம் மூலம் ஆற்றுப் பாதையில் குழித் தோண்டி பள்ளம் ஏற்படுத்தினர். பொதுமக்களுக்கு இடையூறின்றி இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் காவிரி ஆற்றில் மணல் திருடுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.