சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

வானொலி பள்ளி மூலம் வேளாண்தொழில்நுட்பம்: விவசாயிகளுக்கு அழைப்பு

வானொலி பள்ளி மூலம் வேளாண் தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :22 அக்டோபர் 2018, 2:36 am

வானொலி பள்ளி மூலம் வேளாண் தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் என். அகிலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம், திருச்சி அனைத்திந்திய வானொலி நிலையத்தின் மூலம் "பருவநிலை மாற்றங்களுக்கேற்ற வேளாண்மை தொழில்நுட்பங்கள்' என்ற தலைப்பில் வானொலி பள்ளியை நவம்பர் முதல் ஜனவரி வரை நடத்தவுள்ளது.
இந் நிகழ்ச்சியில் மாறிவரும் பருவநிலைகளுக்கேற்ப வேளாண் தொழிலில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அணுகுமுறைகளான மண்வள மேம்பாடு, மண் மூடாக்கு, பருவமாற்ற காலங்களில் கைகொடுக்கும் பூ மற்றும் காய்கறி பயிர்களின் சாகுபடிக் குறிப்புகள், வறட்சியை தாங்கி வளரக்கூடிய குறுகிய காலப் பயிர்கள், மழைநீர் சேமிப்பு முறைகள், பருவநிலை மாற்றத்துக்கேற்ற ஒருங்கிணைந்த பண்ணையம், மானாவாரி காலங்களில் கால்நடைகளின் பராமரிப்பு முறைகள், தீவன மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, விளக்க உரைகளும் 13 வாரங்களில் வானொலி வாயிலாக விரிவாக எடுத்துரைக்கப்படும்.
இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ரூ. 100 மட்டுமே செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். 13-ஆவது வாரம் விவசாயிகளுக்கு நேரடி கலந்துரையாடல் மூலம் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 04286-266435, 266650 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.