வேட்டாம்பாடி பி.ஜி.பி. வேளாண்மை அறிவியல் கல்லூரியில் பயிலும் இளநிலை வேளாண் மாணவர்களுக்குக் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் நாமகிரிப்பேட்டை வேளாண்மைத் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இறுதி ஆண்டு மாணவர்களின் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக கிராம தங்கல் திட்டத்தின் கீழ் 8 மாணவர்கள் ஆகஸ்ட் 21 முதல் நாமகிரிப்பேட்டை வட்டாரத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வேளாண் சார்ந்த பயிற்சி பெற்றனர். நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) பெ. மோகன் வழிகாட்டுதலில் இந்தப் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
கிராம தங்கல் திட்டப் பயிற்சியின் ஒரு பகுதியாக நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் பாரதப் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கார்கூடல்பட்டி கிராமத்தில் நடைபெற்ற பயிர் அறுவடைப் பரிசோதனையில் நாமகிரிப்பேட்டை வட்டார உதவி வேளாண்மை அலுவலர் சு. கோவிந்தசாமி, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் ர. சந்திரசேகரன், பயிர் அறுவடை மேற்பார்வையாளர் கோவர்த்தனன் ஆகியோர் மாணவர்களுடன் கலந்து கொண்டு பயிற்சியளித்தனர்.
இதில், நிலக்கடலை வயலில் குறிப்பிட்ட இடைவெளியில் அளவு மார்க்கம் செய்து பயிர்களின் காய்களை அறுவடை செய்து பின்னர் காய்களின் எடையை அளவிட்டு உலர் எடைக்காக அறுவடையான காய்களை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்டு உலர் எடையைக் கண்காணித்து புள்ளியியல் துறைக்கு இதன் விவரங்களை அனுப்புவது போன்றவை குறித்த பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் சித்திரை பெளா்ணமி திருவிழா தொடக்கம்

பழனி பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

மலைக் கிராமத்துக்கு குதிரைகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

