இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

விவசாயிகள் குழு கூட்டம்

நாமகிரிப்பேட்டையில் விவசாயிகள் குழுக் கூட்டம் நடைபெற்றது.

Updated On :13 பிப்ரவரி 2019, 10:28 am IST

நாமகிரிப்பேட்டையில் விவசாயிகள் குழுக் கூட்டம் நடைபெற்றது.
 வேளாண்மை துறை சார்பில்  நடைமுறையில் உள்ள  நீடித்த,  நிலையான மானாவரி வேளாண்மை இயக்கத் திட்டத்துக்காக, நாமகிரிப்பேட்டை வட்டாரத்துக்குள்பட்ட மூலப்பள்ளிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட இரா.புதுப்பட்டி வருவாய் கிராமம் தேர்வு
செய்யப்பட்டுள்ளது. 
2018-19-ஆம் நிதி ஆண்டில் இந்த ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் செயல்படுத்தப்படவுள்ள துறைவாரியான பங்களிப்புகளை மானாவாரி விவசாயக் குழுக்களுக்கு விளக்கிடும் வகையில் இரா.புதுப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு வேளாண்மை உதவி இயக்குநர் சு.ராஜேஸ்வரி தலைமை வகித்தார். உதவி இயக்குநர் மோகன்பாரதி, வேளாண்மை பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர் பெ.மோகன்,  வேளாண்மை அலுவலர் பசுபதி,  உதவி வேளாண்மை அலுவலர் ராமமூர்த்தி, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் செ.ஸ்ரீதரன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மு.தியாகராஜன், வெ.விக்னேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.