நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

விவசாயிகள் குழு கூட்டம்

நாமகிரிப்பேட்டையில் விவசாயிகள் குழுக் கூட்டம் நடைபெற்றது.

Updated On :13 பிப்ரவரி 2019, 10:28 am IST

நாமகிரிப்பேட்டையில் விவசாயிகள் குழுக் கூட்டம் நடைபெற்றது.
 வேளாண்மை துறை சார்பில்  நடைமுறையில் உள்ள  நீடித்த,  நிலையான மானாவரி வேளாண்மை இயக்கத் திட்டத்துக்காக, நாமகிரிப்பேட்டை வட்டாரத்துக்குள்பட்ட மூலப்பள்ளிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட இரா.புதுப்பட்டி வருவாய் கிராமம் தேர்வு
செய்யப்பட்டுள்ளது. 
2018-19-ஆம் நிதி ஆண்டில் இந்த ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் செயல்படுத்தப்படவுள்ள துறைவாரியான பங்களிப்புகளை மானாவாரி விவசாயக் குழுக்களுக்கு விளக்கிடும் வகையில் இரா.புதுப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு வேளாண்மை உதவி இயக்குநர் சு.ராஜேஸ்வரி தலைமை வகித்தார். உதவி இயக்குநர் மோகன்பாரதி, வேளாண்மை பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர் பெ.மோகன்,  வேளாண்மை அலுவலர் பசுபதி,  உதவி வேளாண்மை அலுவலர் ராமமூர்த்தி, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் செ.ஸ்ரீதரன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மு.தியாகராஜன், வெ.விக்னேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.