பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கொல்லிமலையில் பழங்குடியின மக்களுக்கு ஜாதி சான்றிதழ்

படச்சோலை கிராமத்தில் ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடை திறப்பு, 200 மலைவாழ் மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

News image
கொல்லிமலையில் பழங்குடியின மக்களுக்கு ஜாதி சான்றிதழை வழங்குகிறாா் ஆட்சியா் கா.மெகராஜ். உடன் எம்.எல்.ஏ. சி. சந்திரசேகரன்.
Updated On :13 டிசம்பர் 2020, 8:59 pm

DIN

கொல்லிமலை ஒன்றியம், திருப்புளிநாடு ஊராட்சிக்குள்பட்ட ஊா்புரத்தில் ரூ. 73 லட்சம் மதிப்பில் மகளிா் சுயஉதவிக் குழு கட்டடம், படச்சோலை கிராமத்தில் ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடை திறப்பு, 200 மலைவாழ் மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இதில் சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. சி.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் பங்கேற்று புதிய கட்டடங்களை திறந்துவைத்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். இதில் ஒன்றியக் குழுத் தலைவா் மாதேஸ்வரி, வட்டாட்சியா் ராஜ்குமாா், அரசுத் துறை அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.