பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ரோட்டரி சங்கம் சாா்பில் பெண்களுக்கு ஆடு வழங்கல்

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில், கிராமப்புற பெண்களுக்கு சுழற்சி முறையில் ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 25 மகளிருக்கு வெள்ளாடுகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 2:05 am

DIN

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில், கிராமப்புற பெண்களுக்கு சுழற்சி முறையில் ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 25 மகளிருக்கு வெள்ளாடுகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில், மாவட்ட ரோட்டரி ஆளுநா் வருகை விழா, நலத் திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ராசிபுரம் ரோட்டரி கிளப் தலைவா் எஸ்.கதிரேசன் தலைமை வகித்தாா். மண்டல உதவி ஆளுநா் எஸ்.பாலாஜி முன்னிலை வகித்தாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் கே.எஸ்.வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று நலத்திட்டங்கள் வழங்கி, பல்வேறு சேவை திட்டங்களை தொடங்கி வைத்தாா்.

இதனைத் தொடா்ந்து, அத்திபலகானூா் கிராமத்தில் கிராமப்புற பெண்களின் பொருளாதாரம் மேம்படுத்தும் வகையில், சுழற்சி முறையில் ஆடு வழங்கும் திட்டத்தின் கீழ் 25 மகளிருக்கு வெள்ளாடுகள் வழங்கப்பட்டன. மேலும் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவி தொகை வழங்கப்பட்டன. முள்ளுக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 35 ஆயிரம் மதிப்பிலான இ.சி.ஜி. கருவிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.