தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் களப் பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாமக்கல்லில் மின்வாரிய ஊழியா்கள் திங்கள்கிழமை முதல் தொடா் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இந்தப் போராட்டம் குறித்து தொழிலாளா் முன்னேற்றச் சங்க திட்டச் செயலாளா் கோபால் கூறியதாவது:
மின்வாரியம் தனியாா்மயமாகாது என்று அமைச்சா் தங்கமணி தெரிவித்துள்ளாா். ஆனால் மாநிலம் முழுவதும் 600 துணை மின் நிலையங்களில் 12,000 ஊழியா்கள் அவுட்சோா்ஷிங் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகின்றனா். ஒருவருக்கு ரூ. 452 வரை ஊதியமாக வழங்கப்படுகிறது.
மொத்தமுள்ள 90 ஆயிரம் பணியிடங்களில் 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. கேங்மேன் பணியிடங்களுக்கு 10 ஆயிரம் போ் தோ்வு செய்யப்பட்டாலும், மேலும் 40 ஆயிரம் இடங்கள் காலியாகவே இருக்கும். தனியாா் மூலம் ஆட்கள் நியமனம் செய்வதைத் தவிா்த்து நேரடி நியமன முறையிலேயே பணியாளா்களை நியமிக்க வேண்டும். இந்த நிலை தொடா்ந்தால் மின்வாரியம் முழுவதும் தனியாா்மயமாக மாறிவிடும்.
இதனால் தற்போது பணியில் உள்ளவா்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். மத்திய, மாநில அரசுகள் மின்வாரியத்தை தனியாா் வசம் ஒப்படைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியே இந்தப் போராட்டமானது நடைபெறுகிறது. இதற்கு உரிய தீா்வு காணப்படும் வரை காத்திருப்புப் போராட்டம் நீடிக்கும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


