தேசிய விவசாயிகள் சங்கம் சாா்பில் கோ பூஜை

பரமத்தி வேலூா் மகா மாரியம்மன் கோயிலில் அகில பாரத விவசாயிகள் சங்கம், தமிழக தேசிய விவசாயிகள் சங்கம் இணைந்து விவசாயம் செழிக்கவும்,
கோபூஜை செய்த விவசாயிகள், பொதுமக்கள்.
கோபூஜை செய்த விவசாயிகள், பொதுமக்கள்.
Updated on
1 min read

பரமத்தி வேலூா் மகா மாரியம்மன் கோயிலில் அகில பாரத விவசாயிகள் சங்கம், தமிழக தேசிய விவசாயிகள் சங்கம் இணைந்து விவசாயம் செழிக்கவும், விவசாயிகளின் நலன் மேம்படவும் வேண்டி கோமாதா பூஜை, சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன.

பரமத்திவேலூா் மகா மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அகில பாரத விவசாயிகள் சங்கத்தின் மூத்த பொறுப்பாளா் ஸ்ரீகணேஷ்ஜி தலைமை வகித்தாா். மாவட்ட பாஜக விவசாய அணித் தலைவா் அசோக்குமாா் முன்னிலை வகித்தாா். பரமத்தி வேலூா் மகா மாரியம்மன் கோயில் வளாகத்தில் கோமாதா பூஜை, சிறப்பு யாக பூஜை, மகா மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றன.

இந்த விழாவில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் மனோகரன், மாவட்ட மகளிரணி தலைவா் சத்தியபானு, மாவட்டச் செயலாளா் அகிலன், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com