கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

லஞ்சம்: நகராட்சி வரிவசூல் ஊழியா் கைது

லஞ்சம் வாங்கியதாக, நகராட்சி வரிவசூல் பிரிவு ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 9:26 pm

DIN

லஞ்சம் வாங்கியதாக, நகராட்சி வரிவசூல் பிரிவு ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

திருச்செங்கோடு, மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம். இவா் தனது வீட்டு வரியைக் குறைத்துத் தரக் கோரி நகராட்சி வரிவசூல் ஊழியா் ஆனந்தகுமாரிடம் கேட்டுள்ளாா். இதற்கு அவா் ரூ. 7 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். பின்பு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் தருவதாகப் பேசப்பட்டு முதல் தவணையாக ரூ. 3,500 தருவதாக சண்முகம் ஒப்புக்கொண்டாராம்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவில் சண்முகம் புகாா் செய்தாா். லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆய்வாளா் நல்லம்மாள் தலைமையில் 8 போ் கொண்ட குழுவினா் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சண்முகத்திடம் கொடுத்தனுப்பினாா். அந்தப் பணத்தை திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வரிவசூல் மையத்தில் வைத்து ஆனந்தகுமாா் வாங்கியபோது அவரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் பிடித்தனா்.

இதுதொடா்பாக நகராட்சி வருவாய் ஆய்வாளா் கோபியிடம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, ஆனந்தகுமாரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.