கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கண் கலங்கிய பிகார் இளைஞர்: கை கொடுத்த மாவட்ட ஆட்சியர்

தாய் உயிரிழந்த நிலையில் ெசாந்த ஊர் ெசல்ல முடியாமல் தவித்து வந்த பிகார் இளைஞர், மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமையன்று முறையிட உடனடியாக சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

News image
Updated On :4 ஜூன் 2020, 1:26 pm

DIN

தாய் உயிரிழந்த நிலையில் ெசாந்த ஊர் ெசல்ல முடியாமல் தவித்து வந்த பிகார் இளைஞர், மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமையன்று முறையிட உடனடியாக சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றி வந்த உத்தரப்பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிஸா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் ேசர்ந்த ஆயிரத்துக்கும் ேமற்பட்ட ெதாழிலாளர்கள் அண்மையில் சிறப்பு ரயில்கள், பேருந்துகள் முலம் தங்களுடைய ெசாந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிடும் ெவளிமாநில ெதாழிலாளர்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாமக்கல்-சேலம் சாலை பதிநகரில் உள்ள ஏ.ஆர்.சி. பயோடெக் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்த அகிலேஷ்ராம்(33) என்ற பிகார் மாநில இளைஞர் வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு தன்னுடைய தாய் உயிரிழந்த தகவல்களை ஆதாரத்துடன் ெதரிவித்த அவர், பிகாருக்கு அனுப்பி வைப்பதற்கு உதவ வேண்டும் என கண்ணீருடன் தனது கோரிக்கையை முன் வைத்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் உத்தரவின்படி, அவரை ெசாந்த மாநிலத்திற்கு அனுப்ப தேவையான நடவடிக்கை ேமற்ெகாள்ளப்பட்டது.

சேலம், நாமக்கல்லில் இருந்து பிகாருக்கு ரயில் ெசல்லாத நிலையில், திருப்புரில் இருந்து பிற்பகல் 4 மணிக்கு ஒரு ரயில் பிகார் ெசல்லும் விவரம் ெதரியவந்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செ.பால்பிரின்ஸிலிராஜ்குமார், ேசலம் கோட்ட ரயில்வே அதிகாரி ஹரி என்பவரை ெதாடர்பு ெகாண்டு பிகார் இளைஞர் ஒருவரை மட்டும் சிறப்பு ரயிலில் அனுப்ப நடவடிக்கை ேமற்ெகாள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அனைத்து இருக்கைகளும் முழுமையாக நிரம்பிய நிலையில், அகிலேஷ்ராமின் நிலையை கருத்தில் ெகாண்டு ரயில்வே அதிகாரி ஒரு இருக்கையை உறுதி ெசய்து ெகாடுத்தார். இதனைத் ெதாடர்ந்து, பிகாருக்கு செல்வதற்கான அனுமதி கடிதத்தை மாவட்ட நிர்வாகம் தயார் ெசய்து அந்த இளைஞருக்கு ெகாடுத்தது. பின்னர் சிறப்பு வாகனம் முலம் அவர் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இக்கட்டான நேரத்தில் சொந்த ஊர் ெசல்ல நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் எடுத்த உடனடி முயற்சியை கண்டு அந்த இளைஞர் கண்கலங்கியதுடன், அனைவருக்கும் நன்றி ெதரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.