நாமக்கல் மாவட்டத்தில் பார் கவுன்சிலில் பதிவு பெற்ற வழக்குரைஞர்கள் 60 பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் நிவாரண உதவி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் உத்தரவின்படி மாநிலம் முழுவதும் 12 ஆயிரம் வழக்குரைஞர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக தலா ரூ 4 ஆயிரம் வழங்கப்படுகிறது.
அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் பார் கவுன்சிலில் பதிவு பெற வழக்குரைஞர்களில் 60 பேருக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி கே.ஹெச்.இளவழகன் வழக்குரைஞர்களுக்கு நிவாரணத்திற்கான காசோலைகளை வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மாவட்ட கௌரவ செயலாளர் வழக்குரைஞர் அய்யாவு செய்திருந்தார். மூத்த வழக்குரைஞர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.