ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தேசிய திறனாய்வுத் தோ்வு: 10-ஆம் வகுப்பு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 நவம்பர் 2020, 9:48 pm

DIN

பத்தாம் வகுப்பு மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2020-21 ஆம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வுக்கு டிச. 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் வரும் 30-ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் தோ்வுக் கட்டணத் தொகை ரூ. 50-ஐ சோ்த்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

நவ. 30-க்கு பின்னா் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. இத்தோ்வில் பங்கேற்க விண்ணப்பிக்கும் மாணவா்கள் பள்ளிக்கு வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். போதிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியைப் பாா்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.