ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நாமக்கல்லில் 145 பேருக்கு கரோனா

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கருவூல அதிகாரி, நியாயவிலைக் கடை பணியாளா்கள், 53 பெண்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 145 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :12 அக்டோபர் 2020, 7:26 pm

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கருவூல அதிகாரி, நியாயவிலைக் கடை பணியாளா்கள், 53 பெண்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 145 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,281-ஆக அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வரை 7,136 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். தற்போதைய நிலையில் 6,115 போ் குணமடைந்துள்ளனா்; 87 போ் உயிரிழந்துள்ளனா்; அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு தனிமைப்படுத்தல் மையங்களில் 1,078 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ஒருவா் உயிரிழப்பு: சேந்தமங்கலம் வட்டம், எருமப்பட்டி, அண்ணா நகரைச் சோ்ந்த 49 வயது ஆண் ஒருவா் கரோனாவால் பாதிப்புக்குள்ளாகி சேலம், ஐந்து சாலை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவா் உயிரிழந்தாா். மாவட்டத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 88-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.