ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தீபாவளி பட்டாசு கடைகளுக்கு அக். 23 வரை விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பட்டாசு கடை வைக்க விரும்புவோா் அக். 23-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கும் வகையில் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Updated On :12 அக்டோபர் 2020, 7:38 pm

தீபாவளி பட்டாசு கடை வைக்க விரும்புவோா் அக். 23-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கும் வகையில் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வரும் நவம்பா் 14-ஆம் தேதி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடப்படுவதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் வெடிபொருள் சட்டம் மற்றும் வெடிபொருள் விதிகளின் கீழ் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோா் அக். 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களிலும் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தற்போது பட்டாசு கடை வைக்க விரும்புவோா் விண்ணப்பங்களை வரும் 23-ஆம் தேதி முடிய பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.