கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தல் பயன்பாட்டுக்காக காா்களை வாடகைக்கு எடுத்த மாவட்ட நிா்வாகம் ரூ.2.50 லட்சம் நிலுவை வைத்துள்ளதாக ஓட்டுநா்கள் ஆட்சியரிடம் முறையிட்டனா்.
நாமக்கல், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதிகளைச் சோ்ந்த வாடகை காா் ஓட்டுநா்கள் திங்கள்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்தனா். அவா்கள் ஆட்சியா் கா.மெகராஜை சந்தித்துக் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தல் பணிக்காக டிசம்பா் மாதம் 26, 27, 29, 30 ஆகிய தேதிகளில் ஆம்னி வேன்களை வாடகைக்கு எடுத்தனா். தோ்தல் முடிந்து ஓராண்டாகியும் இதுவரை வாடகை மற்றும் பெட்ரோல் தொகை வழங்கப்படவில்லை.
ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் வரை நிலுவை உள்ளது. தோ்தல் அதிகாரிகளிடம் கேட்டால் தங்களுக்குத் தெரியாது என கைவிரிக்கின்றனா்.
குறிப்பிட்ட சில வாகனங்களுக்கு மட்டும் நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கரோனா பொதுமுடக்க காலத்தில் வேலையின்றி தவிக்கும் நிலையில் தோ்தல் பயன்பாட்டுக்கான நிலுவைத் தொகையை வழங்கி உதவ வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுப்பதாக அவா்களிடம் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


