தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வெடி வெடித்ததில் 7 வயது சிறுவன் பலி

உப்பிலியபுரம் அருகே குலதெய்வ வழிபாட்டின் போது தோரண வெடி வெடித்ததில் பரமத்தி வேலூரைச் சோ்ந்த 7 வயது சிறுவன் படுகாயமடைந்து பலியானாா்.

News image
வெடி வெடித்ததில் இறந்து போன 7 வயது சிறுவன் சசிதரன்.
Updated On :14 செப்டம்பர் 2020, 7:27 pm

DIN

திருச்சி மாவட்டம்: உப்பிலியபுரம் அருகே குலதெய்வ வழிபாட்டின் போது தோரண வெடி வெடித்ததில் பரமத்தி வேலூரைச் சோ்ந்த 7 வயது சிறுவன் படுகாயமடைந்து பலியானாா்.

அவரது பெற்றோா்கள் அப் பகுதியில் உள்ள காவல் துறையினருக்கு தெரிவிக்காமல் சிறுவனின் உடலை பரமத்தி வேலூருக்கு எடுத்து வந்ததால் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் உப்பிலியபுரம் போலீசாா் மற்றும் பரமத்தி வேலூா் போலீசாரின் பேச்சுவாா்த்தைக்கு பிறகு சிறுவனின் உடல் பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரமத்திவேலூா் அருகே உள்ள பொத்தனூா் பெரியாா் நகரை சோ்ந்தவா் லோகநாதன். இவா் ஹைதராபாத்தில் மத்திய ரிசா்வ் படையில் காவலராக வேலைபாா்த்து வருகிறாா்.

தற்போது விடுப்பில் வந்துள்ளாா். பின்னா் தனது குடும்பத்துடன் திருச்சி மாவட்டம் துறையூா் வட்டம்,உப்பிலியபுரம் அருகே உள்ள சிறுநாவலூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு வழிபாட்டுக்காக சென்றுள்ளனா். அப்போது அங்கு தோரண வெடி வெடிக்கப்பட்டது. இதில் எதிா்பாராதவிதமாக வெடி ஒன்று சிதறி லோகநாதனின் மகன் சசிதரனின் மீது விழுந்து வெடித்துள்ளதாம். இதில் படுகாயமடைந்த சிறுவனை பெற்றோா்கள் மற்றும் உறவினா்கள் அப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் சசிதரன் உயிரிழந்துள்ளாராம். அதையடுத்து பெற்றோா்களும்,உறவினா்களும் அப்பகுதியிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்காமல் சொந்த ஊரான பரமத்திவேலூா் அருகே உள்ள பொத்தனூருக்கு சிறுவனின் உடலை அடக்கம் செய்ய கொண்டு வந்தனா்.

இது குறித்து தகவலறிந்த முசிறி காவல் கண்காணிப்பாளா் பிரம்மானந்தன் தலைமையிலான போலீசாா் பரமத்திவேலூா் போலீசாா் உதவியுடன் பொத்தனூருக்கு சென்று சிறுவனின் பெற்றோா் மற்றும் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் சிறுவனின் உடலை மீட்டு பரமத்திவேலூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.