ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நாமக்கல்லில் கரோனா வேகம் அதிகரிப்பு: ஆஞ்சநேயர் கோயில் அலுவலகம், எஸ்பிஐ வங்கி மூடல்

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகம் அதிகரித்து வருகிறது.

News image

மூடப்பட்ட எஸ்பிஐ வங்கி.

Updated On :17 செப்டம்பர் 2020, 7:56 am

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகம் அதிகரித்து வருகிறது. ஆஞ்சநேயர் கோயில் தலைமை எழுத்தர் மற்றும் எஸ்பிஐ வங்கி ஊழியர் ஆகியோர் தொற்றுக்குள்ளானதால் வியாழக்கிழமை அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 3623 பேர் நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 900 பேர் சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை காலை மாவட்டம் முழுவதும் 80க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மகாளய அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அக்கோயில் அலுவலக ஊழியர் கரோனாவால் பாதிக்கப்பட்டதால் கோயில் அலுவலகம் மூடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பக்தர்கள் வருகையும் குறைவாகவே காணப்பட்டது. நாமக்கல் சங்கரன் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கியிலும் ஊழியர் ஒருவர் தொற்றுக்கு ஆளானதால் தற்காலிகமாக மூன்று நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.