குமாரபாளையத்தில் நியாய விலை கடைகளுக்கு அத்தியாவசிய பொருள்கள் ஏற்றி வந்த லாரி, பக்கவாட்டில் கவிழ்ந்ததில் அப்பகுதியில் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சேலம் சாலையில் நகர் பகுதியில் நியாய விலைக் கடை உள்ளது. இக்கடைக்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வந்த லாரி, சேலம் சாலையிலிருந்து செல்ல திரும்பியுள்ளது.

அப்போது எதிர்பாராமல் லாரியின் பின் சக்கரம் பள்ளத்தில் இறங்கியதால் பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதனால், லாரியில் அடுக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் சரிந்து விழுந்தன. அப்பகுதிக்கு கடைகளுக்கு வந்த பொதுமக்கள் இதைக் கண்டு சிதறி ஓடினர்.

இதில், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. வேறொரு லாரி வரவழைக்கப்பட்டு அரிசி மூட்டைகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குஜராத் டைட்டன்ஸ் கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்!
ரூ. 4200 கோடி! அதிக வசூலைக் கொடுத்த இந்திய இயக்குநர் இவர்தான்!
புதுவை மக்களே, விழிப்புடன் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்: விஜய்

புதுச்சேரியில் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைக்கும்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


