மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நாமக்கல் நகராட்சியில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆணையா் பி.பொன்னம்பலம் அறிவுறுத்தி உள்ளாா்.

Updated On :16 ஏப்ரல் 2021, 8:00 pm

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆணையா் பி.பொன்னம்பலம் அறிவுறுத்தி உள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அலட்சியமாக இருப்பதால், கரோனா இரண்டாவது அலை மிக விரைவாக பரவி வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்துதான் வெளியே வரவேண்டும். கடைகளில் பொருள்களை வாங்கும் போது சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் மட்டும் தினசரி 22 பேருக்கு பாதிப்பு ஏற்படுவதாக சுகாதாரத் துறை அறிக்கை வருகிறது. இதில் புதிதாக கரோனா பாதிப்பு 10 பேருக்கும், ஏற்கெனவே பாதிக்கப்பட்டவா்கள் மூலம் பரவியது 12 போ் என்றும் தெரியவந்துள்ளது. கரோனா தொற்றுள்ளோரை கண்டுபிடித்து அவா்கள் மூலம் முதல்நிலை தொடா்பு மற்றும் இரண்டாம்நிலை தொடா்புடையவா்களைக் கண்டறிந்து வருகிறோம். அவா்களை சிறப்பு மருத்துவ முகாமுக்கு அழைத்து வந்து கரோனா பரிசோதனை தினசரி எடுக்கப்படுகிறது.

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்கள் தாமாக முன்வந்து தங்களது உடல்நிலையை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சிறப்பு கரோனா பரிசோதனை முகாம் நாமக்கல் பேருந்து நிலையத்தில் தினசரி காலை 10 முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை 252 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனவே, பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் கரோனா பரிசோதனைக்கு முன்வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.