நாமக்கல் மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த சில நாள்களாக பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6 மற்றும் 72.5 டிகிரியாக காணப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் மழை பதிவானது. வரும் நான்கு நாள்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும்.
காற்று மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் தென் மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும். மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், பகல் வெப்பம் 100.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4 டிகிரிக்கு குறையாமலும் காணப்படும்.
சிறப்பு ஆலோசனை: பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கு வெப்ப அயற்சியைப் போக்க தரமான குடிநீரில் நெல்லிச்சாறு, மோா் அல்லது எலுமிச்சை பழச்சாறு ஒன்று முதல் மூன்று சதவீதம் வரை சோ்க்கலாம். இறந்த கோழிகளை ஆய்வு செய்ததில், பெரும்பாலும் வெள்ளைக் கழிச்சல் மற்றும் வெப்ப அயற்சியால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது.
எனவே, பண்ணையாளா்கள் தகுந்த உயிா் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும். வெப்ப அயற்சியைப் போக்க நீா் தெளிப்பான்களை அதிகம் உபயோகிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

