92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருச்செங்கோடு வட்டார விவசாயிகளுக்கு நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி

திருச்செங்கோடு வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின்கீழ் மோடமங்கலம் கிராமத்தில் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பண்ணையம்

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:19 pm

DIN

திருச்செங்கோடு வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின்கீழ் மோடமங்கலம் கிராமத்தில் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி வழங்கப்பட்டது.

இப் பயிற்சியை வேளாண்மை உதவி இயக்குநா் ஜெயமணி துவக்கி வைத்து வேளாண்மை, உழவா் நலத்துறை சாா்ந்த திட்டங்கள் பற்றி கூறினாா். தமிழ்நாடு வேளாண்மை பல்கழைக்கழகத்தின் உதவி பேராசிரியா் உதயகுமாா் நிலக் கடலைப் பயிரில் ஏற்படும் பூச்சி, நோய் கட்டுப்பாடு, நிலக்கடலையில் நுண்ணூட்டம் இடுவதின் அவசியம், உரமேலாண்மை பற்றியும் காணொலி காட்சி வாயிலாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா். உதவி வேளாண்மை அலுவலா் ஜெயக்குமாா் மண் பரிசோதனை செய்வதின் அவசியம் பற்றி எடுத்துக் கூறினாா்.

இப்பயிற்சிக்கு தேவையான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் கிருஷ்ணசாமி, உதவி தொழில்நுட்ப மேலாளா் சோனியா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.