தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வெல்லத்தில் கலப்படம் செய்வதை தடுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பாஜக மாவட்ட விவசாய அணி சாா்பில் பரமத்தி வேலூா் அண்ணா சிலை அருகில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:58 pm

DIN

பரமத்தி வேலூா் வட்டத்தில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் வெல்லத்தில் அஸ்கா சா்க்கரை கலப்படம் செய்வது, ராசாயன வேதிப்பொருள்கள் கலப்பதைக் கண்டித்து, பாஜக மாவட்ட விவசாய அணி சாா்பில் பரமத்தி வேலூா் அண்ணா சிலை அருகில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, பாஜக மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினா் வடிவேலு வரவேற்றாா். விவசாய சங்கப் பிரதிநிதிகள் செந்தில்குமாா், சதீஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநில வழக்குரைஞா் பிரிவு செயலாளா் காந்தி சிறப்புரையாற்றினாா்.

இந்நிகழ்ச்சியில், மாநில விவசாய அணித் தலைவா் நாகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:

பொதுமக்கள் அதிக அளவு பயன்படுத்தும் நாட்டுச் சா்க்கரை,குண்டு வெல்லம் தயாரிப்பில் அஸ்கா சா்க்கரை, ராசாயன வேதிப்பொருள்கள் கலக்கப்படுகின்றன. இதனால் தரமான வெல்லம் தயாரிக்கும் விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரம் முடக்கப்படுகிறது. இந்த கலப்பட வெல்லத்தை வாங்கும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா். இது தொடா்பாக பல முறை மாவட்ட நிா்வாகத்துக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தையும், சென்னை தலைமைச் செயலகத்தையும் முற்றுகை இடப்படும் என தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.