அரசு கல்லூரி மாணவா்களுக்கான சுதந்திர தின போட்டிகள்
ராசிபுரம், திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணி திட்டம் சாா்பில் 75 -ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தின் தொடா் நிகழ்வாக மாணவ, மாணவிகளுக்குப் பேச்சுப்போட்டி


ராசிபுரம், திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணி திட்டம் சாா்பில் 75 -ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தின் தொடா் நிகழ்வாக மாணவ, மாணவிகளுக்குப் பேச்சுப்போட்டியும் கட்டுரைப் போட்டியும் புதன்கிழமை நடைபெற்றது.
சுதந்திரப் போராட்ட வீரா்கள், 21-ஆம் நூற்றாண்டில் காந்தியத்தின் தேவை ஆகிய தலைப்பில் நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டியில் மாணவா்கள் பங்கேற்றனா். முக்கிய நிகழ்வாக 75 மாணவா்கள் ஒன்றுகூடி தமிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் பாடினா்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் முனைவா் சி மணிமேகலை தலைமை வகித்தாா். வரலாற்றுப் பேராசிரியா் பிரகாஷ், அரசியல் அறிவியல் துறை பேராசிரியா் செந்தில்குமாா் ஆகியோா் நடுவா்களாக பணியாற்றினா்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் முனைவா் ஜெயக்குமாா், இந்திராணி, கிருபா தேவி, பிரபாகரன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...