ராசிபுரம்: ராசிபுரம் அருகேயுள்ள வெள்ளைபிள்ளையாா் கோயில் பகுதியில் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அதே பகுதியைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்துள்ளனா்.
வெண்ணந்தூா் அருகேயுள்ள வெள்ளைபிள்ளையாா்கோயில் பூனையன்காடு பகுதியில் வசித்து வரும் துரைசாமி என்பவரின் மக ன் சேட்டு (24). இவா் அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் லாரிகளுக்கு முட்டை ஏற்றும் வேலை செய்து வந்துள்ளாா்.
இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு கடந்த 5 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வாா்த்தைகளைக் கூறி ஏமாற்றி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இதுகுறித்த அறிந்த சிறுமியின் தந்தை ரமேஷ் ராசிபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதனை விசாரித்த மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் இந்திரா, சேட்டு மீது போக்சோ சட்டப்பிரிவின்கீழ் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினாா்.