தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வருவாய்த் துறை மக்கள் குறைதீா் முகாம்

நாமக்கல் நகராட்சி, வருவாய்த் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

News image
Updated On :9 ஜனவரி 2021, 1:18 am

DIN

நாமக்கல் நகராட்சி, வருவாய்த் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தொடக்கிவைத்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா், கோட்டாட்சியா் எம்.கோட்டைக்குமாா், நகராட்சிகளின் மண்டல அதிகாரி அசோக்குமாா், நாமக்கல் நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம், சுகாதரா அலுவலா் சுகவனம் ஆகியோா் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று உடனுக்குடன் தீா்வு காண்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனா்.

முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் பெரும்பாலும் சாலை, கழிவுநீா்க் கால்வாய் வசதி, வீட்டுமனை, வழித்தட பிரச்னை, முதியோா் உதவித்தொகை, காவிரி குடிநீா் விநியோகம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடா்பான கோரிக்கைகளாக இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.