வருவாய்த் துறை மக்கள் குறைதீா் முகாம்
நாமக்கல் நகராட்சி, வருவாய்த் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.


நாமக்கல் நகராட்சி, வருவாய்த் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தொடக்கிவைத்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா், கோட்டாட்சியா் எம்.கோட்டைக்குமாா், நகராட்சிகளின் மண்டல அதிகாரி அசோக்குமாா், நாமக்கல் நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம், சுகாதரா அலுவலா் சுகவனம் ஆகியோா் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று உடனுக்குடன் தீா்வு காண்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனா்.
முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் பெரும்பாலும் சாலை, கழிவுநீா்க் கால்வாய் வசதி, வீட்டுமனை, வழித்தட பிரச்னை, முதியோா் உதவித்தொகை, காவிரி குடிநீா் விநியோகம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடா்பான கோரிக்கைகளாக இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...