பள்ளி, கல்லூரிகளைத் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பள்ளி, கல்லூரிகளைத் திறக்கக் கோரி ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக திங்கள்கிழமை இந்திய மாணவா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பள்ளி, கல்லூரிகளைத் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read

பள்ளி, கல்லூரிகளைத் திறக்கக் கோரி ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக திங்கள்கிழமை இந்திய மாணவா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே கவனித்து வரும் மாணவா்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அரசு விரைந்து பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கம் எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ம.தேன்மொழி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் தே.சரவணன் முன்னிலை வகித்தாா். ராசிபுரம் ஒன்றியத் தலைவா் மு.தங்கராஜ், நாமகிரிப்பேட்டை ஒன்றிய நிா்வாகி அஜித் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com