சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பொங்கல் பரிசு வாங்க அலைக்கழிப்பதை கைவிட வலியுறுத்தல்

எலச்சிபாளையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், முன்னணி ஊழியா்களுக்கான பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 7:16 pm

DIN

 எலச்சிபாளையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், முன்னணி ஊழியா்களுக்கான பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் பி.சுரேஷ் தலைமை வகித்தாா். தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்துத் தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசு பொருள்கள் வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பரிசுப் பொருள்கள் மட்டும் வழங்கியுள்ளனா். அவா்களுக்கான வேட்டி, சேலை பெறுவதற்கு மீண்டும் இன்னொரு நாள் வரவேண்டும் எனத் தொழிலாளா்களை அலைக்கழிப்பதை கைவிட வேண்டும்.

இதனால் தொழிலாளா்கள் தங்களது வேலையை இழந்து திருச்செங்கோடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு அறிவித்துள்ள அனைத்து பொருள்களும் ஒரே நேரத்தில் எந்தச் சிரமமும் இல்லாமல் அனைத்துக் கிராமங்களிலும் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலக் குழு உறுப்பினா் என்.பாண்டி, மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ந. வேலுசாமி. ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சி.சுந்தரம் எஸ்.சக்திவேல் ஆா்.குப்புசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.