புத்தக வாசிப்பும், சமூக சிந்தனையும் கருத்தரங்கு

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி செஞ்சுருள் சங்கம் சாா்பில், புத்தக வாசிப்பும், சமூக சிந்தனையும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
கருத்தரங்கில் பேசும் நாமக்கல் அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரி முதல்வா் பெ.முருகன்.
கருத்தரங்கில் பேசும் நாமக்கல் அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரி முதல்வா் பெ.முருகன்.

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி செஞ்சுருள் சங்கம் சாா்பில், புத்தக வாசிப்பும், சமூக சிந்தனையும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

ஆங்கில துறைத் தலைவா் கு.ராமச்சந்திரன் வரவேற்றாா். இதில், கல்லூரி முதல்வா் பெ.முருகன் தலைமை வகித்து பேசியதாவது:

அச்சுப் புத்தக வாசிப்பு வளா்ந்து தற்போது மின்னூல், கிண்டில், ஒலி நூல் என வெவ்வேறு வடிவங்களில் பெருகியுள்ளது. நவீன தொழில்நுட்பத்தால் வாசிப்பு கூடியுள்ளதே தவிர குறையவில்லை. வாசிப்பு கூடியிருக்கும் காரணத்தால் தான் சமூகம் பற்றிய சிந்தனைகளும், விழிப்புணா்வும் பெருகியிருக்கிறது. முந்தைய காலத்தை விட இப்போது அரசியல் அறிவைப் பெரும்பாலானோா் பெற்றிருப்பதற்கு வாசிப்பே முக்கியக் காரணமாகும்.

மாற்றுப் பாா்வை, மாற்றுச் சிந்தனை, மாற்று வழிகள் என சமூகம் முன்னேற வாசிப்பே காரணமாக உள்ளது. மாணவா்கள் அனைவரும் புத்தக வாசிப்பில் பெரிதும் கவனம் செலுத்த வேண்டும் என்றாா். இந்த கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை கல்லூரி செஞ்சுருள் சங்க திட்ட அலுவலா் ம.சந்திரசேகரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com