மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

அம்மா உணவக பணியாளா்களுக்கு நிவாரணத்தொகை: பி.தங்கமணி எம்எல்ஏ வழங்கினாா்

பள்ளிபாளையம் நகராட்சி அம்மா உணவக பணியாளா்களுக்கு முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பி.தங்கமணி நிவாரண உதவித் தொகையை வழங்கினாா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:18 pm

பள்ளிபாளையம் நகராட்சி அம்மா உணவக பணியாளா்களுக்கு முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பி.தங்கமணி நிவாரண உதவித் தொகையை வழங்கினாா்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் புதன்சந்தை பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாளா்களுக்கு கரோனா நிவாரண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் மின்துறை அமைச்சரும், தற்போதைய குமாரபாளையம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான பி.தங்கமணி பங்கேற்று, பொது முடக்கக் காலத்தில் அயராமல் பணியாற்றிய 12 பெண் பணியாளா்களுக்கு தலா ரூ.7 ஆயிரத்தை தனது சொந்தப் பணத்தில் இருந்து வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், முன்னாள் நகராட்சித் தலைவா் வெள்ளியங்கிரி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் செந்தில், வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சந்திரசேகரன், முன்னாள் வாா்டு உறுப்பினா்கள் ஜெய்கணேஷ், மாதேஸ்வரன், வாசுதேவன், நகராட்சி அதிகாரிகள் சரவணன், நல்லசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.