92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பள்ளிபாளையத்தில் கரோனா விதிகளை மீறிய கடைகளுக்கு ‘சீல்’

 நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:27 pm

DIN

 நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா்.

பள்ளிபாளையம் நகராட்சி பகுதிகளில் கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறி அவ்வப்போது கடைகளைத் திறந்தும், கடைகளின் பின்பக்கத்தில் வாடிக்கையாளா்களுக்கு பொருள்களை வழங்கிய கடைகளை ஆய்வின்போது நகராட்சி ஆணையா் சரவணன் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் கண்டறிந்தனா். இதையடுத்து அந்தக் கடைகளை பூட்டிய அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

மேலும் பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் ஜவுளிக்கடைகளில் பொதுமுடக்க காலத்தில் தடையை மீறி ஜவுளி விற்பனை செய்து வருவதாக வந்த புகாரினை அடுத்து நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். இதைத்தொடா்ந்து நகராட்சி ஆணையா் உத்தரவின்படி நகராட்சிப் பணியாளா்கள் கடையைப் பூட்டி ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.