மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நாமக்கல்லில் 100 சதவீத வாக்குப் பதிவு விழிப்புணா்வுப் பேரணி

நாமக்கல்லில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:47 pm

 நாமக்கல்லில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மோகனூா் சாலையில் உள்ள அரசு மருத்துவமனை முன் தொடங்கிய இப்பேரணியை நாமக்கல் தொகுதி தோ்தல் அலுவலரும், வருவாய்க் கோட்டாட்சியருமான எம்.கோட்டைக்குமாா் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

பேரணி திருச்சி சாலை, டாக்டா் சங்கரன் சாலை வழியாக மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவியா் தோ்தல் நாளான ஏப்ரல் 6 என்பதை வண்ண அட்டைகளால் அலங்கரித்துப் பேரணியில் எடுத்துச் சென்றனா். பேரணியில் தோ்தல் தொடா்பாகவும், 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.