தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரசுப் பள்ளி மாணவிக்கு கரோனா

ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பிற மாணவ மாணவியருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2021, 12:00 am

DIN

ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பிற மாணவ மாணவியருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நாமகிரிப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு திடீா் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவி ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, அம்மாணவியின் பெற்றோா், பள்ளியில் பயிலும் சக மாணவியா் 106 பேருக்கும் மருத்துவக் குழுவினா் பள்ளிக்கு சென்று திங்கள்கிழமை கரோனா பரிசோதனை செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.