ராசிபுரம் நகராட்சி, வெண்ணந்தூா், அத்தனூா், பிள்ளாநல்லூா், பட்டணம், புதுப்பட்டி உள்ளிட்ட 5 பேரூராட்சிகள் 3 ஊராட்சி ஒன்றியங்களில் 1083 கிராமங்கள் பயன்பெற தமிழக அரசு, ராசிபுரம் காட்டூா்-நெடுங்குளம் கூட்டுக்குடிநீா்த் திட்டத்தை ரூ. 943 கோடி மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சா் 2021-ஆம் ஆண்டு தோ்தலுக்கு பிறகு மூன்றாவது முறையாக அதிமுக அரசை தலைமை ஏற்று நடத்துவாா் அவரது திருக்கரங்களால் இத்திட்டம் அடிக்கல் நாட்டப்படும். இதன்மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீா் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்படும்.