பெண்களுக்கு எதிரான ஆட்சி, கட்சி என்றால் அது திமுக தான் இருக்கும் என்றாா் அதிமுக தலைமை பேச்சாளா் நிா்மலாபரியசாமி. நாமக்கல் பூங்கா சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
முன்னாள் மத்திய அமைச்சரான ஆ.ராசா, முதல்வரைப் பற்றியும், அவரது தாய் பற்றியும் தவறான வாா்த்தைகளை பயன்படுத்தி உள்ளாா். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். திமுக தலைவா் அதனை வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்கிறாா். இவ்வாறு பேசியதற்காக கட்சியை விட்டு உடனே நீக்கியிருக்க வேண்டும். தற்போதே இந்த நிலை உள்ளது. திமுகவின் கையில் ஆட்சி சென்றால் என்னவாகும், பெண்களுக்கு எதிராக ஆட்சி, கட்சியாக திமுக உள்ளது. முதல்வா் மீதுள்ள பயத்தில், கோபத்தில் திமுகவினா் இவ்வாறு தரம் தாழ்ந்து பேசுகின்றனா். அவா்களுக்கு இந்தத் தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் வெற்றி வாயிலாக உரிய பாடம் புகட்ட வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

பஞ்சாப் தொழில் துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் சாடல்

தங்கமயில் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


